ஞாயிறு, 23 ஜனவரி, 2022

சிதறாத வாழ்வியலின் கூர்மை

 சிதறாத வாழ்வியலின் கூர்மை 

+++++++++++++++++++++++++++++++

துள்ளியெழும் சொற்களுக்குள் இளமை 

துவளாதப்  பொருளிருக்கும் வளமை 

நெஞ்சினிக்கும் நிகழ்வுகளில் புதுமை 

நினைவிருக்கும் எந்நாளும் பெருமை 


கொஞ்சும் மொழியாளுகின்ற திறமை 

குவலயத்தின் கோபுரமாய் தாய்மை 

மனிதநேயம் வளர்த்தெடுக்கும் கடமை 

மண்மீது தழைத்தோங்கும் பெண்மை 


முடியாளும் பெருமையிலே கருமை 

முன்னெடுக்கும் மாந்தரின் முதுமை 

கனிவான பேச்சாலே தனிமை  

இனியோடும் என்பதே உண்மை 


உவமையோடு உலாவரும் புலமை 

ஒப்பற்றத் தமிழரின் உடைமை 

தெடர்ந்துவரும் பொல்லாத வறுமை 

துரத்திடவே துணிந்தெழும்  வலிமை  


நாடெங்கும் நற்பயிராய் நன்மை 

நனிசிறக்க களைந்திடுவோம் தீமை 

திறன்மிகு செயலாலே உண்மை 

தென்றலென நமையாளும் குளுமை 


கள்ளமனம் கொண்டாடும் சிறுமை 

காலத்தால் நிலைக்காத வெறுமை 

சிந்தித்துச் செயலாற்றும் ஆண்மை  

சிதறாத வாழ்வியலின் கூர்மை 


………கா.ந.கல்யாணசுந்தரம்