தன்முனைக் கவிதைகள் தமிழில் புது வரவு –வடிவமைப்பு – கா.ந.கல்யாணசுந்தரம்
********************************************************************************************************************
.
· # மை ஊற்றி எழுதிய
தூவல்கள் அலமாரியை
அலங்கரிக்கின்றன
எனது கவிதை வரிகளுடன்
· #குளத்தில் வீசிய கல்லொன்று
நீர் வட்டங்களைத் தந்தது
எனது கைகளின் வலிக்கு
மருந்தானது
· #முன்பின் தெரியாவிட்டால்
ஒன்றும் கவலைவேண்டாம்
நாம் அமர்ந்து கொண்டது
எதிரெதிர் இருக்கைகளில்
· #தேனிர் கடைக்குள் பறந்து
எனக்கான கோப்பையில்
அமர்ந்துவிட்டுப் போனது
வண்ணத்துப்பூச்சி
· #உனது பயணப் பாதையில்
மலர்கள் உதிர வேண்டும்
எனது மனமெங்கும்
மென்மையின் சுவாசம்
#மெல்ல வரும் விடியல்
காலை நடைபயணத்தில்
பனி விலகி
மேலெழும்ப
வந்தமரும்
பட்டாம்பூச்சி
· #எதிரெதிரே சந்தித்தபின்னும்
எனது மௌன
மொழிக்குள்
கவிதை எழுதிச்
செல்கிறாள்
ஒரு ரசிகை
· #தூரத்தில் இணையும்
இருப்புப்பாதைகள்
அருகில்
அமர்ந்தும் உறவை வெறுக்கும்
மனக் காயங்கள்
· #நூல்கண்டு குறைந்துகொண்டே
வந்தாலும்
பறந்தபடி
உயரும் பட்டத்தில்
தெளிவாய் எனது
வருங்காலம்
· #எனக்குள் யாசிக்கும்
வார்த்தைகளை
தேர்ந்தெடுப்பதில்
முனைப்புடன்
நிற்கின்றன
சமுதாய நிகழ்வுகள்
.........கா.ந.கல்யாணசுந்தரம்